Friday, May 22, 2009

ஆயர்பாடி மாளிகையில்

எழுதியவர் -கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.வி
பாடியவர்-எஸ்.பி.பி

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் மாய கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை தின்று மண்டலத்தை காடியப்பின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
நாக பதம் மீதினில் அவன் நர்தனங்கள் ஆடையிலே தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோகா நிலை போலிருக்கும் யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன் அழகை காண்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ