Monday, October 12, 2009

தெரியவில்லை

நிதம் உன்னை கனவில் காணுகிறேன்
நிறையத்தான் நானும் பேசுகிறேன்
அட நேரிலே உன்னை கண்டதும்
ஏனோ ஒளிந்துக்கொண்டேன்........
கடை வீதி போகும்போதெல்லாம்
உன்னை போலே யாரும் கடந்து சென்றால்
நின்று பார்க்கிறேன் , அட நீ இல்லை
நான் ஏனோ உடைகின்றேன்
அருகில் நீ இருப்பது அறியாமல்
உன் புகைப்படம் ரசித்தே நான் நின்றேன்
நீ பார்க்கிறாய் நான் வேர்க்கிறேன்
சீ போடா ஏன் பார்த்தாய்..
இது போலே இரட்டை வேடமிட்டு
நடிக்கின்றேன் ஏனோ தெரியவில்லை
அட இன்னுமே இதிலிருந்து தெளியவில்லை .......

ஆனந்தம்

தபால் காரர் குரல்
கேட்டு நறுக்கிய காய்களை அடுக்களையில் விட்டு
விட்டு வாசல்
ஓடினேன் நம்ப முடியவில்லை
என்னால் முதல் முறையாய்
நான் எழுதி அனுப்பிய கவிதையை
மாதப்பத்திரிக்கை வெளியிடிருந்தது
அந்த நொடியில்
ஆனந்தம் வேறில்லை என்றபடி நின்றேன்
அதை பொய்யாக்கியது
உள்ளே விளையாடிகொண்டிருந்த என்
பிஞ்சு முதல் முறையாய்
"அம்மா" என்று என்னை அழைத்து .......

Friday, October 9, 2009

திருமண புகைப்படம்


சரிந்துவிட்டது பூ மாலை

நீ என் தோள் சாய்ந்ததும் நிகராக

நிற்க இயலாமல் ...

Tuesday, October 6, 2009

குழந்தை ...

கவலை
கொள்கிறேன் கர்பத்தில் யேந்த இயலாததை எண்ணி ,
களிப்பும் கொள்கிறேன்
கனவில் உன் முகம் காண்பதை எண்ணி ....