விடியற்காலை பொழுதாகி போகும்
உறக்கம் கலைக்க மனமில்லை,
கனவில் வந்து தலை கோதும் குழந்தை
எனதா என்று தெரியவில்லை,
கற்பிக்க சொல்லி கற்றுக் கொடுக்கும்
குருவா எனக்கு புரியவில்லை
கைகள் பற்றி, புது உலகம்
காட்டும் ஒளிக்கு அங்கே பஞ்சமில்லை
பகலில் என்னை பிரிந்திருகிறதே
தனிமை அதற்கு பயமில்லை
இரவு வரும்வரை காத்திருக்கின்றேன்
மீண்டும் பூ முக தரிசனம் தாராய் ..
Saturday, February 27, 2010
Friday, February 26, 2010
கள்ளி
கண்ணே நீ
கண்ணுறங்கி நான் கண்டதே இல்லையே?
என்றான் என் கண்ணாளன்...
இரவு முழுவதும் நான் உறங்குவதை, நீ ரசித்துக்கொண்டிருந்தது
எனக்கு தெரியும் ..ஏன் பொய்யுரைக்கிறாய் ?
என்றேன்
காரிருளிலும் என் கண்கள் உன்னை கண்டதை
நீ உறங்கியிருந்தால் எவ்வாறு அறிந்துப்பாய்?
என்றான்
அகப்பட்டுக்கொண்ட கள்ளியாய் நான்...
கண்ணுறங்கி நான் கண்டதே இல்லையே?
என்றான் என் கண்ணாளன்...
இரவு முழுவதும் நான் உறங்குவதை, நீ ரசித்துக்கொண்டிருந்தது
எனக்கு தெரியும் ..ஏன் பொய்யுரைக்கிறாய் ?
என்றேன்
காரிருளிலும் என் கண்கள் உன்னை கண்டதை
நீ உறங்கியிருந்தால் எவ்வாறு அறிந்துப்பாய்?
என்றான்
அகப்பட்டுக்கொண்ட கள்ளியாய் நான்...
கொல்கிறேன் காதலை
ஏமாற்றிய காதலன் தன் மனைவியோடு
வருகையில்,
அப்பா என்று அழைக்கச் செல்லும் தன குழந்தையை
வாய் பொத்தி கூட்டிச் செல்லும்
பேதை போல
உன் காதல் கை கூட
என்னிடம் யோசனை
கேட்கும் போதெல்லாம்
அமிழ்த்துக் கொல்கிறேன்
என் காதலை
புன்னகைத்துக் கொண்டே...
வருகையில்,
அப்பா என்று அழைக்கச் செல்லும் தன குழந்தையை
வாய் பொத்தி கூட்டிச் செல்லும்
பேதை போல
உன் காதல் கை கூட
என்னிடம் யோசனை
கேட்கும் போதெல்லாம்
அமிழ்த்துக் கொல்கிறேன்
என் காதலை
புன்னகைத்துக் கொண்டே...
பொறாமை
நீ என் நிழலோடு பேசிக்கொண்டிருக்கிறாய் ,
நான் அருகில் இருப்பதை உணராமல்
என் நிழற்படம் மீது பொறாமை கொள்கிறேன் நான்..
நான் அருகில் இருப்பதை உணராமல்
என் நிழற்படம் மீது பொறாமை கொள்கிறேன் நான்..
கிள்ளி எரிகிறேன்
உன்னிடம் சொல்ல எனக்குதான் தகுதி இல்லை,
ஒவ்வொரு முறை துளிர்க்கும் போதும் கிள்ளி எரிகிறேன் ,
வேரை எடுக்க மனமில்லை ,
என்னுள் மட்டுமாவது வாழ்ந்து விட்டு போகட்டுமே ,
என் காதல் ...
ஒவ்வொரு முறை துளிர்க்கும் போதும் கிள்ளி எரிகிறேன் ,
வேரை எடுக்க மனமில்லை ,
என்னுள் மட்டுமாவது வாழ்ந்து விட்டு போகட்டுமே ,
என் காதல் ...
Tuesday, February 23, 2010
Subscribe to:
Posts (Atom)