தோள்களில் சாய்ந்தழும் வரம் கேட்டேன்
அழுகை மட்டும் தந்து சென்றாய்
அழுகை அழுகையாய் வருகிறதே
தோள்கள் இல்லையே சாய்ந்து கொள்ள
விதியும் வலியது உணர்ந்து
கொண்டேன் உன்னை பிரித்து சென்றதே வலி உணர்ந்தேன்
தனிமை இனிமை என்று சொன்னேன்
தனித்தே விட்டாய் தவிக்கின்றேன்
தேடி தேடி வந்து காதலித்தாய்
கைகள் பிடித்தும் ஏன் உதரிவிட்டாய்
கை விடும் உரிமையும் உனக்கு மட்டும்
கை பிடித்தவன் நீதானே
சலித்துவிட்டது காதலிதான்
காதல் புதிதாய் நீ தேடிகொண்டாய்
இதயத்தில் உன்னை செதுக்கி வைத்தேன்
என் இதயம் உடைந்தால் தான் நீ மறைவாய்