Monday, October 12, 2009

ஆனந்தம்

தபால் காரர் குரல்
கேட்டு நறுக்கிய காய்களை அடுக்களையில் விட்டு
விட்டு வாசல்
ஓடினேன் நம்ப முடியவில்லை
என்னால் முதல் முறையாய்
நான் எழுதி அனுப்பிய கவிதையை
மாதப்பத்திரிக்கை வெளியிடிருந்தது
அந்த நொடியில்
ஆனந்தம் வேறில்லை என்றபடி நின்றேன்
அதை பொய்யாக்கியது
உள்ளே விளையாடிகொண்டிருந்த என்
பிஞ்சு முதல் முறையாய்
"அம்மா" என்று என்னை அழைத்து .......

1 comment: