Monday, October 12, 2009

தெரியவில்லை

நிதம் உன்னை கனவில் காணுகிறேன்
நிறையத்தான் நானும் பேசுகிறேன்
அட நேரிலே உன்னை கண்டதும்
ஏனோ ஒளிந்துக்கொண்டேன்........
கடை வீதி போகும்போதெல்லாம்
உன்னை போலே யாரும் கடந்து சென்றால்
நின்று பார்க்கிறேன் , அட நீ இல்லை
நான் ஏனோ உடைகின்றேன்
அருகில் நீ இருப்பது அறியாமல்
உன் புகைப்படம் ரசித்தே நான் நின்றேன்
நீ பார்க்கிறாய் நான் வேர்க்கிறேன்
சீ போடா ஏன் பார்த்தாய்..
இது போலே இரட்டை வேடமிட்டு
நடிக்கின்றேன் ஏனோ தெரியவில்லை
அட இன்னுமே இதிலிருந்து தெளியவில்லை .......

1 comment: