விடியற்காலை பொழுதாகி போகும்
உறக்கம் கலைக்க மனமில்லை,
கனவில் வந்து தலை கோதும் குழந்தை
எனதா என்று தெரியவில்லை,
கற்பிக்க சொல்லி கற்றுக் கொடுக்கும்
குருவா எனக்கு புரியவில்லை
கைகள் பற்றி, புது உலகம்
காட்டும் ஒளிக்கு அங்கே பஞ்சமில்லை
பகலில் என்னை பிரிந்திருகிறதே
தனிமை அதற்கு பயமில்லை
இரவு வரும்வரை காத்திருக்கின்றேன்
மீண்டும் பூ முக தரிசனம் தாராய் ..
Saturday, February 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment