ஏமாற்றத்தை நேர்கொள்ளும் போதிலும் பெருந்தன்மையோடு புன்னகைக்கும் மேன்மக்களை நினைவூட்டுகிறது அவள் இதழில் தவழவிட்ட புன்னகை மிகச்சிறியவளாகிறேன் விளையாடும் நோக்கத்தில் அவள் பொம்மையை பிடுங்கி அழவைக்க நினைத்தமையால் ..
கதை பருகும் ஆசையில் வேகமாய் திருப்பிய பக்கங்கள் நுனிப்புல் மேய்ந்த கண்கள் நடு நிசி சொப்பனத்தில் திடுமென எழுந்ததை போல் மணம் ஒரு நொடி நகராமல் நிற்க நீர் மறுத்து பால் உண்ணும் அன்னத்தை ஒத்து தமிழ் விடுத்து கதை படித்த அறியாமையை அரை கிணறு தாண்டியதும் உணர்ந்தனள் இவள் அமுதை மறந்த நள் என்று ....