Monday, August 23, 2010

அமுதை மறுத்தவள்


கதை பருகும் ஆசையில்
வேகமாய் திருப்பிய பக்கங்கள்
நுனிப்புல் மேய்ந்த கண்கள்
நடு நிசி சொப்பனத்தில்
திடுமென எழுந்ததை போல்
மணம் ஒரு நொடி நகராமல் நிற்க
நீர் மறுத்து பால் உண்ணும் அன்னத்தை ஒத்து
தமிழ் விடுத்து கதை படித்த
அறியாமையை
அரை கிணறு தாண்டியதும்
உணர்ந்தனள் இவள்
அமுதை மறந்த நள் என்று ....

No comments:

Post a Comment