Monday, August 23, 2010

மீண்டும் பிறக்கிறேன்


முன்னோக்கி நகரும்போதே,
பின்னோக்கி நகரும் மரங்களோடு
பயணிக்கிறேன்
புறக்கணிக்கப்பட்ட கடந்தகாலத்துக்கு

அடைபட்ட கண்களுக்குள்
இருந்த சோகம்
நீராய் கசிய,
அரும்பொன்று கண் துடைக்கிறது
மெலிதாய் புன்னகைத்தபடி
மலடி என்ற பட்டமும் துடைக்கப்பட்டது .....

இமை தாழ் திறக்கிறேன்
வரவேற்கிறது மழலை
என் எதிர்காலத்தில்
ஒளி வீசியபடி

1 comment: