Monday, August 23, 2010

ஒப்பாரி


நோய் தாக்கி வெக்காம தடுப்பூசி
போட்டு வெச்சேன்
சேய் தாக்கி போனதென்ன
யமனா மாறி போட்ட வேலி
மகராசி நீ இந்த
பூமி ஆள பிடிக்காம
வானுலக தேவதையா
மாரித்தான் போனியோடி
தாலாட்டு பாடி உன்ன
தொட்டிலிலே தூங்க வெச்சேன்
ஒப்பாரி பாடி உன்ன
இடுகாட்டில் பொதைக்கவெச்ச


(தடுப்பூசி போட்டதனால், சில குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு ...)

No comments:

Post a Comment