Wednesday, March 17, 2010

எப்போதும் போல்

புன்னகை மலரச்செய்து
பூந்தோட்டம் பரிசளித்தேன்
எப்போதும் போல் நீ கண்ணீர் கொடுக்கிறாய்
கவலையில்லை எனக்கு
காரணம், அதை கொண்டே தோட்டத்திற்கு
நீர் பாய்ச்சுகிறேன்
கண்ணீரெல்லாம் கண் காண வேருக்கு சென்று
புன்னகை மட்டும் மலர்கிறது நீ காண

No comments:

Post a Comment