Wednesday, March 17, 2010

சிரிக்கும் கண்ணீர் துளிகள்

உரக்க உதிர்க்கும் சொற்களுக்கு
உயிர் உள்ளதோ இல்லையோ
மௌனங்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கும்..

உனக்கு புரிய வைக்க
மொழிகளால் இயலவில்ல
மௌனம் பேசியதை
உணர்ந்தபோதும் நீ
அறிந்ததாய் காட்டிக்கொள்ளவில்லை

அறிந்தும் அறியாமலும்
காவியமாகிறது காதல்
ஏட்டில் மட்டும் உயிர் பெற்று......
உண்மையில் உயிர் விடுகிறது
சில கண்ணீர் துளிகள்
முற்றுப்ப் புள்ளி இடுகிறது தொடர்ந்து......

No comments:

Post a Comment