Saturday, March 20, 2010

யார் இவன் ...


கண்ணீர் துடைக்க காயம் தந்தவனா?
கண்கள் தடுக்க நாணம் தந்தவனா?
கரங்கள் பிடிக்க காதல் தந்தவனா?

பிழைகளை ரசிக்கின்றான்
இதயம் வருடுகிறான்
வெளியே சென்றாலும்
என் உள்ளே வசிக்கின்றான்

விழி வாசல் கடந்து
உள்ளம் திருடுகிறான்
அவன் மொழிகளில்
நேசம் கலந்தே பேசுகிறான்

யாரென்று அவனை
நானும் கேட்கின்றேன்

புன்னகை மட்டும்
பதிலாய் தந்து சென்றான்
.......

No comments:

Post a Comment