Saturday, March 20, 2010

புரிதல்

புரியாதவைகளில் புதைந்து போயிருந்தேன்
முட்டி மோதி போராடி புரிந்துக்கொள்ள
முயற்சித்தபோது
புரிதலின் ஆரம்பமே
கபடமற்ற உள்ளத்தை இழப்பது
என்பது புரிந்தது
முயற்சியை தொடர்வதா வேண்டாமா
என்ற சிந்தனையில்
நாட்கள் மட்டும் தொடர்கின்றன
விந்தையான உலகமிது
முட்டாளுக்கும் அப்பாவிக்கும்
மயிரிழை வேறுபாடு காட்டி
என்னை மாயையில்
ஆழ்த்துகிறது

No comments:

Post a Comment