Thursday, September 24, 2009

வரம்

தோள்களில் சாய்ந்தழும் வரம் கேட்டேன்

அழுகை மட்டும் தந்து சென்றாய்

அழுகை அழுகையாய் வருகிறதே

தோள்கள் இல்லையே சாய்ந்து கொள்ள

விதியும் வலியது உணர்ந்து

கொண்டேன் உன்னை பிரித்து சென்றதே வலி உணர்ந்தேன்

தனிமை இனிமை என்று சொன்னேன்

தனித்தே விட்டாய் தவிக்கின்றேன்
தேடி தேடி வந்து காதலித்தாய்

கைகள் பிடித்தும் ஏன் உதரிவிட்டாய்

கை விடும் உரிமையும் உனக்கு மட்டும்

கை பிடித்தவன் நீதானே

சலித்துவிட்டது காதலிதான்

காதல் புதிதாய் நீ தேடிகொண்டாய்

இதயத்தில் உன்னை செதுக்கி வைத்தேன்

என் இதயம் உடைந்தால் தான் நீ மறைவாய்

1 comment:

  1. What a coincidence? My first poem on my blog is on the same title but a different thought... Yours here is with a sad tone but mine there was with a happy tone.

    ReplyDelete